விரைவில் வடகிழக்கு பருவமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

14 October 2019 அரசியல்
rain.jpg

விரைவில் தமிழகம் உள்ளிட்டப் பகுதிகளில், வடகிழக்குப் பருவமழை ஆரம்பமாக உள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் திரு. எஸ் பாலச்சந்திரன் பேசினார்.

தென்னிந்திய பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு திசையில், காற்று வீசத் தொடங்கியுள்ளது. இதனால் வடகிழக்கு பருவமழை வரும் 17ம் தேதி, ஆரம்பமாகும் வாய்ப்புகள் உள்ளன.

அதற்கு முன், வெப்ப சலனத்தின் காரணமாக, தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன. கடந்த ஆண்டு பெய்த வடகிழக்குப் பருவ மழையில், 44 செமீ மழை பதிவாகி உள்ளது. இது இயல்பை விட குறைவான அளவாகும் எனக் கூறியுள்ளார்.

HOT NEWS