தற்கொலை செய்து கொண்ட தம்பதி! மகன்கள் கொல்லி வைக்கக் கூடாது என சபதம்!

24 July 2020 அரசியல்
suicide.jpg

சென்னை செம்பியம் பகுதியில், வயது மூத்த தம்பதியினர், மின்விசிறியில் தூக்குமாட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம், தமிழகத்தில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

செம்பியம் பகுதியினைச் சேர்ந்த குணசேகரன் மற்றும் செல்வி ஆகிய தம்பதிகளுக்கு, மூன்று மகன்கள் உள்ளனர். தச்சு வேலை செய்யும் குணசேகரின் 2 மகன்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. மூன்றாவது மகன் ஸ்ரீதர் குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆனதால், சரிவர வேலைக்கு செல்வதில்லை. லாக்டவுன் காரணமாக, காவலாளி வேலைக்குச் சென்று கொண்டிருந்தார் குணசேகரன்.

அப்பொழுது, வீட்டின் வாடகையினைக் கூட தர பணம் இல்லாததால், தன்னுடைய இரண்டு மகன்களிடமும் பண உதவிக் கேட்டுள்ளார். அதற்கு இரண்டு மகன்களும் தரவில்லை. இதனால் மணமுடைந்த குணசேகரனும், அவருடைய மனைவி செல்வியும் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குமாட்டித் தற்கொலை செய்து கொண்டனர்.

வீட்டிற்கு வந்த ஸ்ரீதர் தாய் தந்தை இருவரும் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. பிரதத்தினை கைப்பற்றிய போலீசார் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு குணசேகரன் எழுதி வைத்திருந்த கடிதத்தினையும் கைப்பற்றினர்.

அதில், எங்கள் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. எங்கள் உடலுக்கு என்னுடைய மகன்கள் யாரும் இறுதி அஞ்சலி செலுத்தக் கூடாது. போலீசாரே இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என்று எழுதி வைத்துள்ளனர்.

HOT NEWS