கடந்த ஞாயிறு அன்று, வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி, மூன்றாவது தனியார் இரயிலான மஹா கால் எக்ஸ்பிரஸ் ரயிலினை துவக்கி வைத்தார்.
இந்த இரயிலானது, மத்தியப் பிரதேசத்தில் இருந்து, உத்திரப் பிரதேசம் வழியாக பயணம் செய்ய உள்ளது. இந்த ரயிலானது, முற்றிலும் ஆன்மீகப் பயணத்திற்கென அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயிலில் பலவித வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. முற்றிலும் குளீரூட்டப்பட்ட விதத்தில், இந்த இரயில் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த ரயிலில் 64 என்ற சீட்டானது, சிவபெருமானுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த சீட்டிற்கு மேலே உள்ள பெட்டானது, சிவபெருமான் பூஜைக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கு அவருடையப் படத்தினை வைத்து, பூஜைகள் செய்து வருகின்றனர். நாளை (20-02-2020) முதல், இந்த ரயிலானது, தன்னுடைய அதிகாரப்பூர்வ பயணத்தினைத் தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து, பயணிகளுக்காக ரயில் ஊழியர்கள் பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.
அவர்கள் கூறுகையில், இந்த ரயில் தன்னுடைய அதிகாரப்பூர்வ பயணத்தினை ஆரம்பித்ததும், இந்த படங்கள் அகற்றப்படும். மற்ற ரயில்கள் போலவே, இந்த ரயிலும் சுத்தமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.