ஒரே ஒரு சென்னை பெண்ணிற்காக இயங்கிய விமானம்! வைரலாகும் போட்டோ!

31 January 2020 அரசியல்
vedamcoronavirus.jpg

சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதைத் தொடர்ந்து, அங்கிருக்கும் வெளிநாட்டினர் வேகமாக வெளியேறி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, இந்தியர்களும் வெளியேறி வருகின்றனர்.

அதில், தமிழ்நாடு மாநிலம் சென்னையைச் சேர்ந்த எம்.வேலம் என்ற பெண்ணும், கோரோனா வைரஸால் அதகிம் பாதிக்கப்பட்டுள்ள டியூஞ்சான் மாகாணத்தில் இருந்து, சென்னைக்கு விமானம் மூலம் வந்துள்ளார். அவர் வந்த விமானத்தில் வேறு யாரும் வரவில்லை. அவர் மட்டுமே இருந்துள்ளார். இதனை அவர் புகைப்படம் எடுத்து, சமூக வலைதளததில் பகிர்ந்துள்ளார்.

இது தற்பொழுது வைரலாகி வருகின்றது. இதுவரை, யாருக்காகவும் இது போன்று ஒரு விமானத்தினை, ஒரு பெண்ணிற்காக எந்த நிறுவனமும் இயக்கியதில்லை. அங்கு பாதிப்பு அதிகமாகி வருகின்ற நிலையில், இந்த விமானம் இயக்கப்பட்டு உள்ளது. சென்னை வந்த வேலத்தினை, சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர். பின்னர், அந்த பெண்ணை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

HOT NEWS