மும்பையில் உள்ள, ஓஎன்ஜிசிக்கு சொந்தமான ஆலையில் ஏற்பட்ட தீவிபத்துக் காரணமாக, 5 பேர் தீயில் சிக்கிப் பலியாகினர்.
இந்தியாவிலேயே மிகப் பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் என்றால், அது ஓஎன்ஜிசி தான். இந்தியாவின் எரிபொருள் தேவையினை 70% அதுவே நிறைவேற்றுகிறது.
இன்று காலை, நவி மும்பை பகுதியில், காலை 6.45மணி அளவில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அந்த ஆலையில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக, ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயினை அணைக்கப் போராடினர்.
அப்பொழுது எதிர்ப்பாராத விதமாக 20க்கும் மேற்ப்பட்ட ஊழியர்கள் தீ விபத்தில் சிக்கிக்கொண்டனர். இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 11 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தீயணைப்பு வீரர்களின் அபார முயற்சியின் காரணமாக, ஒரு சில மணி நேரங்களிலேயே தீயானது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால், பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. இது குறித்து வழக்குப் பதிவு செய்த நவிமும்பை போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.