அரசு கல்லூரிகளுக்கான ஆன்லைன் சேர்க்கைத் தொடங்கியது!

21 July 2020 அரசியல்
kpanbalagan1.jpg

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் சேர்க்கையானது, தற்பொழுது தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவி உள்ளதால், ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால், நடப்புக் கல்வியாண்டிற்கான மாணவர்களை, கல்லூரிகளில் சேர்ப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து, தமிழக உயர்கல்வித் துறையானது தீவிர ஆலோசனைக்குப் பின், தற்பொழுது புதிய முடிவினை எடுத்துள்ளது.

அதன்படி, தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்களை www.tngasa.in www.tndceonline.com என்ற வலைதளங்கள் மூலம் வழங்கி வருகின்றது. இந்தக் கல்லூரிகளில் படிக்க விரும்பும் மாணவர்கள், மேற்கூரிய வலைத்தளங்களைப் பயன்படுத்தி, விண்ணப்பிக்கக் கோரியுள்ளது. அதே போல் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்களும் ஆன்லைனில் பெறப்பட்டு வருகின்றது. அதற்கு தற்பொழுது வரை, 79,000 பேர் விண்ணப்பித்து உள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS