மாநிலங்களவையில் முழங்கிய ஓபிஆர்! தமிழை தேசிய அலுவல் மொழி ஆக்குங்கள் என கோரிக்கை!

19 November 2019 அரசியல்
opraveendranath.jpg

இன்று மாநிலங்களை கூட்டம் நடைபெற்றது. அதில், அதிமுக எம்பியான ஓபி ரவீந்திரநாத், தமிழ் மொழியினை மத்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தார்.

இன்று நாடாளுமன்றம் கூடியது. அதில் பேசிய ரவீந்திரநாத், தமிழ் மொழியானது உலகின் தொன்மையான மொழிகளுள் ஒன்று. இதனை யுனஸ்கோ அறிவித்து உள்ளது. அந்த மொழிக்கு மரியாதை செய்யும் வகையிலும், மேம்படுத்தும் வகையிலும் அதனை மத்தியி அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

HOT NEWS