தமிழகத்தின் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர் செல்வத்தின் உடன்பிறந்த சகோதரரான ஓபிராஜாவுக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
ஓ பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ ராஜா, தற்பொழுது பெரியகுளத்தில் வசித்து வருகின்றார். அவர் தேனி மாவட்டம் ஆவின் பெருந்தலைவராக உள்ளார். அவருக்குத் திடீரென்று உடல்நலம் சரியில்லாமல் போனது. இதனைத் தொடர்ந்து, அவர் அவசர அவசரமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்று சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சோதனை செய்யப்பட்டு உள்ளது.