ரஜினியின் பேச்சைக் கண்டித்த ஓபிஎஸ்!

19 November 2019 அரசியல்
opschicago.jpg

கமல்60 கலைவிழாவில், நேற்று அற்புதம், அதிசயம் நடந்தது, இன்று அற்புதம், அதிசயம் நடக்கின்றது. நாளையும் அந்த அற்புதம், அதிசயம் நடக்கும் என சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார்.

இதனையடுத்து, அதிமுக கட்சியினர் தற்பொழுது ரஜினியின் கருத்துக்கெதிராக போர்கொடி தூக்கியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி கனவில் கூட முதல்வர் ஆக வேண்டும் என, நினைத்து இருக்கமாட்டார். ஆனால் இன்று அவர் தான் முதல்வர். அவர் ஆட்சியில் நான்கைந்து மாதங்களுக்கு மேல், தாக்குப்பிடிக்கமாட்டார் என பலரும் தங்களுடையக் கருத்துக்களை கூறினார். ஆனால், நடந்தது வேறு.

நேற்றும் அதிசயம் நடந்தது. இன்றும் அதிசயம் நடக்கின்றது. நாளையும் அது நடக்கும் எனக் கூறினார். அதற்குப் பதிலளிக்கும் வகையில், நேற்று மாலை அமெரிக்க சுற்றுப் பயணம் முடித்துக் கொண்டு, தமிழகம் திரும்பிய ஓபிஎஸ் இந்தப் பேச்சிற்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.

அமெரிக்க சுற்றுப் பயணம் நன்றாக இருந்தது. அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள், தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளனர். தமிழக வீட்டு வசதி திட்டங்களுக்காக, உலக வங்கியானது 5 ஆயிரம் கோடி ரூபாயினை கடனாகத் தர சம்மதித்துள்ளது என்றுக் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்தின் கருத்தினை வண்மையாகக் கண்டிக்கின்றேன். தேர்தல் எப்பொழுது வந்தாலும், அதனை அதிமுக தைரியமாக எதிர்கொள்ளும் என்று கூறினார்.

HOT NEWS