இந்திய விமானப்படை மீது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்! உளவுத் துறை எச்சரிக்கை!

05 October 2019 அரசியல்
apachehelicopter.jpg

காஷ்மீர் மற்றும் அதனை ஒட்டியுள்ள விமானப் படைக்கு சொந்தமான தளங்களில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக, மத்திய உளவுத் துறை இரண்டாவது முறையாக எச்சரித்துள்ளது.

இதனால், இந்திய இராணுவத்தினர் உஷாரான நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஸ் ஈ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்த, 8 முதல் 10 தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவி இருப்பதாகவும், அவர்கள் காஷ்மீர் மற்றும் விமானப்படைக்குச் சொந்தமான, விமான தளங்களில் தாக்குதல் நடத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனால், பதன்கோட் தளம், அமிர்தசரஸ், காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் உள்ள விமான தளங்கள் ஆகியவை உட்பட, இந்தியாவின் விமான நிலையங்களும் உச்சகட்டப் பாதுகாப்பில் உள்ளன.

தொடர்ந்து, காஷ்மீர் மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில், கடும் ரோந்து பணியில், இந்திய இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

HOT NEWS