உலகின் அழிந்து வரும் உயிரினங்களுள், ஒரங்குட்டான் குரங்கு இனமும் ஒன்று. இந்த குரங்கானது தற்பொழுது வைரலாகி வருகின்றது.
போர்னியா தீவில், உள்ள ஒரங்குட்டான் குரங்குகளைப் பாதுகாக்கும் பொருட்டு, அங்கு சென்றுள்ள தன்னார்வல நபர், அங்குள்ளு விஷப் பாம்புகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். அப்படி அவர் வேலை செய்து கொண்டு இருக்கும் பொழுது, எதிர்பாராத விதமாக சகதியில் சிக்கிக் கொண்டார்.
அவர், சகதியில் சிக்கியிருப்பதைப் பார்த்த ஒரங்குட்டான் குரங்கு ஒன்று, மரத்தில் இருந்து இறங்கி வந்து, உதவ முன்வந்துள்ளது. இவர் நிலைமையைப் பார்த்த அந்த குரங்கானது, கையினை நீட்டி, உதவிக்கரம் நீட்டியுள்ளது. இதனை, அந்த நபருடன் வேலை செய்த நபர், புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்த சம்பம், சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரலாகி வருகின்றது. காப்பாத்த வந்த இடத்துல காப்பாத்தி விட்டப்பா!