அத்வானி எதற்காக பாபர் மசூதியை இடிக்க முற்பட்டார்! ஓவைசி சராமாரி கேள்வி!

11 November 2019 அரசியல்
owaisi.jpg

பாபர் மசூதி கட்டப்பட்டது சட்ட விரோதம் என்றால், எதற்காக அதனை அத்வானி இடிக்க முற்பட்டார். ஒரு வேளை பாபர் மசூதி கட்டப்பட்டது சரியானது என்றால், ஏன் அத்வானிக்கு இடம் தரக் கூடாது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹைதராபாத்தினை சேர்ந்த ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஓவைசி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு, தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்.

இது குறித்து பேசியுள்ள ஓவைசி, உங்கள் வீட்டினை ஒருவர் வந்து இடிக்கின்றார். அதற்காக ஒருவரிடம் நீங்கள் சென்று மத்தியஸ்தம் செய்ய சொல்கின்றீர்கள். அவரோ, இடித்தவருக்கு வீடு கொடுத்துவிட்டு, உங்களுக்கு வேறொரு நிலம் தந்தால், அதனை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து, தன்னுடைய எதிர்பினை பதிவு செய்து வரும் ஓவைசி, இஸ்லாமியர்களுக்குத் தனியாக வேறொரு இடத்தில் நிலம் வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் கூறி, எங்களை அவமதித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

HOT NEWS