ஆக்சிஜன் சிலிண்டர் இறக்குமதி! 700 கோடியில் மத்திய அரசு புதிய திட்டம்!

16 October 2020 அரசியல்
oxygencylinder.jpg

வெளிநாடுகளில் இருந்து சுமார் 1 லட்சம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் சிலண்டர்களை, சுமார் 700 கோடியில் வாங்குவதற்கு, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தொடர்ந்து மருத்துவமனைகளில் பொதுமக்கள் குவிந்த வருகின்ற காரணத்தால், நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்ற ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு கடுமையானத் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நோயாளிகளின் பயன்பாட்டிற்காக, ஆக்சிஜன் சிலண்டர்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இந்த நிலையில், வருகின்ற குளிர்காலத்தில் இந்த கொரோனா தொற்று மேலும் அதிகமாகும் எனவும், அதனால் ஆக்சிஜன் சிலண்டர்களின் தேவையானது, மிகவும் அதிகரிக்கும் என, மத்திய அரசு யூகித்துள்ளது.

எனவே, டென்டர் முறையில் புதிய ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, திரவ ஆக்சிஜனை வாங்குவதற்கு 700 கோடியில் புதிய சர்வதேச டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இதனடிப்படையில், நம் நாட்டிற்குத் தேவையான ஒரு லட்சம் மெர்ரிக் டன் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS