ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார் ப சிதம்பரம். சிபிஐயைத் தொடர்ந்து, இந்திய அமலாக்கப்பிரிவும் அவர் மீது வழக்குத் தொடர்ந்தது. இதனையடுத்து, அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து சிறையிலேயே இருந்து வருவதால், அவரின் உடல்நிலை மிக மோசமானது. இதனையடுத்து, சிபிஐ தொடுத்த வழக்கில் ஜாமீன் கிடைத்தது. இருந்த போதிலும், அமலாக்கத் துறையின் வழக்கு நிலுவையில் இருப்பதால், அவர் தொடர்ந்து திஹார் சிறையில் இருந்து வருகின்றார். இந்நிலையில், இன்று காலையில் ராகுல் காந்தி மற்றும் ப்ரியங்கா காந்தி ஆகியோர், திஹார் சிறைக்குச் சென்று ப சிதம்பரத்தினைச் சந்தித்துப் பேசினர்.
இன்று, ப சிதம்பரத்தின் ஜாமீன் மனுவானது, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்து நீதிமன்றம், அவருடைய காவலை வரும் டிசம்பர் 11ம் தேதி வரையிலும் நீட்டித்தது. இதனையடுத்து, அவர் மீண்டும் திஹார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.