நவம்பர் 27ம் தேதி வரை காவல்! எடை குறைந்த ப சிதம்பரம்!

15 November 2019 அரசியல்
pchidambarm.jpg

நவம்பர் 27ம் தேதி வரை, ப சிதம்பரத்தின் காவலை நீட்டித்து, டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி அன்று, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், வீட்டில் இருந்த ப சிதம்பரத்தினை சுவர் ஏறிக் குதித்து, சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து, சிபிஐ காவலில் இருந்து வந்த சிதம்பரம், திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு, வீட்டில் இருந்து உணவு உட்பட பல வசதிகள் செய்து தரப்பட்டன. அவர், மீது இந்திய அமலாக்கப் பிரிவும் வழக்குத் தொடர்ந்தது. மேலும், அதுவும், ப சிதம்பரத்திடம் விசாரணை நடத்தியது.

இந்நிலையில், அவருக்கு கடந்த மாதம் நிபந்தனை ஜாமீன் வழங்கி, நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், அவர் வெளியில் வர இயலவில்லை. அவர், சிபிஐ வழக்கில் ஜாமீன் பெற்றாலும், அமலாக்கத்துறையின் வழக்கில் ஜாமீன் பெற இயலவில்லை. இதனையடுத்து, அவர் தொடர்ந்து அமலாக்கத்துறையின் விசாரணையில் உள்ளார். தற்பொழுது, அவருடைய காவலை மேலும் நீட்டிக்க அமலாக்கத் துறையானது, நீதிமன்றத்திடம் அனுமதி கோரியது.

இதனையடுத்து, அவருடைய காவலினை வரும் நவம்பர் 27ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது டெல்லி நீதிமன்றம்.

HOT NEWS