இந்திய இராணுவம் தாக்கியதில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் கூறியுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் நாட்டின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய இராணுவம் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகள் மீது, அத்துமீறித் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில், தங்களுடைய இராணுவத்தினைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் இறந்துள்ளனர்.
மேலும், இந்தியாவிற்கு தங்கள் தரப்பில் இருந்து பதிலடி கொடுத்ததாகவும், அதனால் ஹஜி பிர் பகுதியில் உள்ள இந்தியாவின் நிலைகள் சேதமடைந்ததாகவும், தங்களுடையத் தாக்குதலால் மூன்று இந்திய வீரர்கள் பலியானதாகவும் கூறியுள்ளது.