பாகிஸ்தான் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது! இந்திய இராணுவம் அதிரடி!

20 June 2020 அரசியல்
pakistandrone.jpg

இந்தியாவிற்குள் உளவுப் பார்த்த பாகிஸ்தான் ட்ரோன், இந்திய இராணுவத்தினரால் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டது.

ஜம்மூ காஷ்மீர் மாவட்டம் ஹிராநகர் பகுதியில் உள்ள ரதுவா பகுதியில், இந்திய இராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது, அங்கிருந்த வயல்வெளியின் மீது பாகிஸ்தான் இராணுவத்திற்குச் சொந்தமான ட்ரோன் பறப்பதைக் கண்டுபிடித்தனர். அதனை, வெற்றிகரமாக, இந்திய இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.

இந்தப் பகுதியானது, பாகிஸ்தான் தீவிரவாதிகளால் அதிகளவில் இந்தியாவிற்குள் ஊடுறுவப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மழைக் காலங்களில் இந்தப் பகுதிகளினைப் பயன்படுத்தித் தான் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுறுவல் செயலினை செய்கின்றன. தற்பொழுது சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோனில் இருந்து, பயங்கர ஆயுதங்களும் அகற்றப்பட்டன.

ட்ரோன் மூலம், இந்திய எல்லைப் பகுதிகளையும், இராணுவத்தினரையும் கண்காணித்து, ஆளில்லாதப் பகுதிகளில் தீவிரவாதிகளை உள்ள நுழைப்பதற்காக இது போன்ற செயல்களில் பாகிஸ்தான் இராணுவம் ஈடுபடுகின்றது. இது பற்றி, இந்திய இராணுவம் விளக்கமளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS