அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்திய பாக் இராணுவத்தினை துரத்தியடித்த இந்திய இராணுவம்!

19 December 2019 அரசியல்
indianflag.jpg

இந்தியாவின் எல்லைப் பகுதிகள் மீது, பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்து, அத்துமீறித் துப்பாக்கிச் சூடு நடத்துவது தொடர் கதையாக உள்ளது. அப்படி தற்பொழுதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது பாகிஸ்தான்.

காஷ்மீர் மாநிலத்தின் பூஜ்ச் மாவட்டத்தில் உள்ள மான்கோட் பகுதியில், இந்திய இராணுவ வீரர்கள் எல்லைக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது, சிறிய ரக குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு மூலம், இந்திய இராணுவத்தின் மீது பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இதனையடுத்து, இந்திய இராணுவம் பதிலடி கொடுக்கும் விதமாக, பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனையடுத்து, தலைதெறிக்க ஓடியது பாகிஸ்தான் இராணுவம். இது குறித்துப் பேசிய இராணுவ அதிகாரி, இந்தத் தாக்குதலால் இந்திய இராணுவத்தினருக்கோ அல்லது பொது மக்களுக்கோ எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறியுள்ளார்.

HOT NEWS