பாகிஸ்தான் புதிய திட்டம்! வான் வழியை அடைக்க முயற்சி!

28 August 2019 அரசியல்
imrankhan.jpg

பாகிஸ்தானிற்கும், நம் நாட்டிற்கும் இடையில் உள்ளப் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றால், அது மிகையாகாது. அந்த வகையில், புதியதாக ஒரு திட்டத்தை பாகிஸ்தான் தீட்டியுள்ளது.

இதனை அந்நாட்டின் அறிவியல் மற்றும் விஞ்ஞானம் அமைச்சர் கூறியுள்ளார். அது குறித்து அவர் பேசுகையில், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானிற்கு இடையில், வான்வெளிப் போக்குவரத்து உள்ளது. இந்தியாவில் இருந்து, ஆப்கானிஸ்தான் செல்லும் விமானங்கள் பாகிஸ்தான் மீது தான் பறந்து செல்ல வேண்டும். அதற்கு நம் நாடு அனுமதி கொடுத்துள்ளது.

இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் மக்களுக்கு துரோகம் செய்துள்ளதால், ஆப்கானிஸ்தானிற்கு இடையில் உள்ள, விமானப்பாதையை மூட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இதனால், இந்தியாவிற்கு பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டமாகும். இதனை பாகிஸ்தான் பிரதமர் விரைவில் செயல்படுத்த உள்ளார் என அவர் பேசியுள்ளார்.

HOT NEWS