இந்திய இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், பாகிஸ்தான் வீரர்கள் வெள்ளைக் கொடி காட்டிய சம்பவம் தற்பொழுது, வைரலாகி வருகிறது.
காஷ்மீர் பிரச்சனைக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே, பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 10ம் தேதி அன்று இரவு, பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதனை கண்டு சுதாரித்த நம் இந்திய வீரர்கள், திருப்பிச் சுட்டுத் தள்ளினர்.
இதனை எதிர்ப்பார்க்காத பாகிஸ்தான் வீரர்கள், பதுங்கு குழிகளுக்குச் சென்று பதுங்கினர். இருப்பினும், இந்திய வீரர்களின் தாக்குதலால், நிலை தடுமாறினர். ஹஜீபூர் பகுதியில் நடைபெற்ற இத்தாக்குதலில், இரண்டு பாகிஸ்தான் வீரர்களை இந்திய இராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இறந்த வீரர்களின் உடல்களும், அங்கேயே கிடந்தன.
இதனை இந்திய வீரர்கள் எடுக்கவில்லை. இதனை முன்னிட்டு, பாகிஸ்தான் வீரர்கள், வெள்ளைக் கொடியை ஏந்திப் பிடித்துக் கொண்டு, இறந்த வீரர்களின் உடலை எடுத்துச் சென்றனர். இந்த வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது. இதனை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
#WATCH Hajipur Sector: Indian Army killed two Pakistani soldiers in retaliation to unprovoked ceasefire violation by Pakistan. Pakistani soldiers retrieved the bodies of their killed personnel after showing white flag. (10.9.19/11.9.19) pic.twitter.com/1AOnGalNkO
— ANI (@ANI) September 14, 2019