courtesy:twitter.com/crpf and indian army
இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே, ஏற்கனவே பிரச்சனை தீவிரமாக உள்ளது. இந்நிலையில், ஜம்மூ காஷ்மீர் பகுதியில், குப்வாரா என்ற இடத்தில், பாகிஸ்தான் இராணுவத்தினர் எல்லை விதிகளை மீறி, துப்பாக்கிச் சூடு நடத்தியதில், இரண்டு இந்திய இராணுவ வீரர்கள் வீர மணரம் அடைந்தனர்.
பாகிஸ்தான் இராணுவம், அத்துமீறி நடத்திய இந்தத் தாக்குதலை இந்திய வீரர்கள் எதிர்பார்க்கவில்லை. மேலும், இந்தத் தாக்குதலில் இரண்டு இந்தியா இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களில் ஒருவரும், பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனை, இந்திய இராணுவ அதிகாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால், இந்திய இராணுவம் கடும் அதிருப்தியில் உள்ளது. மேலும், இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையானத் தாக்குதலையும் நடத்தியுள்ளது.