எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு! தமிழக வீரர் வீரமரணம்!

06 June 2020 அரசியல்
tnarmysoldier.jpg

நேற்று மாலையில், எல்லையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், தமிழக வீரர் மதியழகன் வீரமரணம் அடைந்தார்.

நேற்று மாலையில், ஜம்மூ காஷ்மீரில் அமைந்துள்ள சுந்தர பாணி என்ற இடத்தில் இந்திய இராணுவத்திற்கும், பாகிஸ்தான் இராணுவத்திற்கும் இடையில், துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த சண்டையானது, கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் இராணுவம், எல்லை மீறி துப்பாக்கிச் சூட்டினை நடத்தி வருகின்றன.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில், தமிழகத்தின் எடப்பாடி பகுதியினைச் சேர்ந்த மதியழகன் என்பவர், உடலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து வீரமரணம் அடைந்தார். 1999ம் ஆண்டு இந்திய இராணுவத்தில் இவர் சேர்ந்தார். தற்பொழுது இவர் ஹவில்தாராக பணிபுரிந்து வந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இவருடைய மரணத்திற்கு, தமிழகத்தின் தலைவர்கள் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து உள்ளனர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவருடைய குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாயினை அறிவித்துள்ளார். அவர் மரணமடைந்துள்ள செய்தியால், அவருடைய குடும்பத்தினரும், அவர்கள் குடியிருக்கும் பகுதி மக்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

HOT NEWS