இராணுவ உடையை அணியுங்கள்! தீவிரவாதிகளுக்கு அறிவுரை கூறும் பாகிஸ்தான்!

31 October 2019 அரசியல்
pakistanterrorist.jpg

credit:youtube.com/cnn

இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே, தற்பொழுது தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இந்தியாவின் மீது பகிரங்கமாகக் குற்றம் சாட்டி வருகின்றது.

இதனிடையே, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் எல்லையோரப் பகுதிகளில், பாகிஸ்தான் இராணுவத்தினர் கூடாரம் அமைத்துள்ளதாகத் தகவல்கள் பரவியுள்ளன. மேலும், தற்பொழுது பாகிஸ்தான் க்ரே பட்டியலில் உள்ளதால், எப்பொழுது வேண்டும் என்றாலும், பொருளாதாரத் தடையினை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, தீவிரவாதிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்ற நெருக்கடியும் உள்ளது.

இதனையடுத்து, தீவிரவாதிகள் பாகிஸ்தான் இராணுவ உடைகளை அணிந்து கொண்டு செல்ல பாகிஸ்தான் இராணுவம் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தானின் எல்லையோரத்தில் இருக்கும் இராணுவ வீரர்களைப் போல, நீங்களும் உடைய அணியே வேண்டும் என தீவிரவாதிகளை பாகிஸ்தான் கேட்டுக் கொண்டுள்ளது.

அப்பொழுது தான் சர்வதேச நிதிய ஆணையத்தின் கண்களில் இருந்து தப்பிக்க முடியும் எனவும், இந்தியாவின் மீது எளிதாகத் தாக்குதல் நடத்த முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

source:www.indiatoday.in/mail-today/story/kulgam-killings-adhir-chowdhury-slams-centre-workers-death-1614261-2019-10-31

HOT NEWS