பாகிஸ்தான் ரயிலில் தீ! 73 பேர் உடல் கருகி பலி!

31 October 2019 அரசியல்
pakistantrainfire.jpg

பாகிஸ்தான் நாட்டின் ரயிலில் தீ பிடித்ததன் காரணமாக, அதில் பயணம் செய்த 73 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

கராச்சியில் இருந்து லாகூட் செல்லும் பொழுது, தெற்குப் பஞ்சாபின் ரஹீம் யூசப் கான் பகுதியினை, ரயில் நெருங்கும் பொழுது, சமைக்கப் பயன்படுத்தப்பட்ட கேஸ் சிலிண்டர் வெடித்ததில், ரயிலின் மூன்று பெட்டிகளில் மளமளவென்று தீப்பற்றியது.

இந்த தீ விபத்தில் இருந்து தப்பிப்பதற்காக, ஓடும் ரயில் என்றுக் கூடப்பாராமல், அதில் பயணித்தவர்கள் வேகமாக குதித்துள்ளனர். இதன் காரணமாக பலரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த தீ விபத்தின் காரணமாக, இதுவரை சுமார் 73 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் ஆபத்தான நிலையில், மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். ரயிலில் இருந்த, மூன்று பெட்டிகள் முற்றிலும் எரிந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மோசமானப் பராமரிப்பும், புதிய முதலீடு இல்லாமல் இருபதுமே இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகின்றது.

HOT NEWS