பாஸ்டேக் பெற கால அவகாசம் நீட்டிப்பு! மத்திய அமைச்சர் தகவல்!

16 December 2019 அரசியல்
nithingadkari1.jpg

டோல்கேட்டுகளில், பணம் செலுத்துவதற்காக வழங்கப்பட்டு வரும் பாஸ்டேக் பெறுவதற்கான கால அவகாசத்தினை நீட்டித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

டோல்கேட்டுகளில், பணம் செலுத்த, வாகனங்கள் வரிசையில் நிற்கின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனைக் குறைக்கும் பொருட்டு, ஆன்லைனிலும், முன்கூட்டியும் டோல்கேட் பணத்தினை செலுத்தும் வசதியினை தேசிய நெடுச்சாலைத் துறை அறிமுகப்படுத்தியது. அதற்கு பாஸ்டேக் என்ற பெயரினையும் வைத்தது.

இதனை அனைத்து வாகன உரிமையாளர்களும் முன்கூட்டியேப் பணம் செலுத்தி, பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதற்கான கால அவகாசம் டிசம்பர் 1 என நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்பொழுது ஜனவரி 15 என, அதனைப் பெறும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

HOT NEWS