ப சிதம்பரத்திற்கு உடல்நலக்குறைவு! எய்ம்ஸில் சிகிச்சை!

06 October 2019 அரசியல்
pchidambaram2.jpg

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திரு. ப சிதம்பரம், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், நீதிமன்ற உத்தரவினை அடுத்து, திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருக்கு அங்கு அறை ஒதுக்கப்பட்டு, சிறப்புப் பாதுகாப்பில் வைக்கப்பட்டார். அங்கு உள்ள அவரினை சென்று, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் திருமதி. சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஆகியோர் சென்று பார்த்து வந்தனர். சிதம்பரத்திற்குப் பதிலாக, அவருடையக் குடும்பத்தினர் சமூக வலைதளங்கில் பேசி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மதியம் சிதம்பரத்திற்கு திடீர் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால், முதலில் அங்கிருந்த மருத்துவர்கள் மருத்துவம் செய்தனர். வலி அடங்காததால், நீதிமன்ற உத்தரவினை அடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை செய்தனர்.

பின்னர், தொடர்ந்து அங்கு அவருக்கு சோதனைகளும், வயிற்று வலிக்கான சிகிச்சைகளும் கொடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்த அவர், பின்னர், மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

HOT NEWS