பா.சிதம்பரம் காவல் நீட்டிப்பு! உச்சநீதிமன்றம் அதிரடி!

27 August 2019 அரசியல்
pchidambarm.jpg

பா.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்காமல், விசாரணைக் காலத்தை அதிகரித்துள்ளது உச்சநீதிமன்றம்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பா.சிதம்பரத்தை, சிபிஐ காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று அவருடைய விசாரணை முடிந்ததால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது சிபிஐ.

அப்பொழுது, விசாரணைக் காலத்தை மேலும், நீட்டித்துத் தரும்படி வேண்டுகோள் விடுத்தது. மேலும், சிபிஐ தரப்பு வாதிடுகையில், சிதம்பரம் உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை. எனவே, விசாரணைக் காலத்தை மேலும், 5 நாட்கள் நீட்டிக்கக் கோரிக்கை விடுத்தது.

இதனை அடுத்து, வரும் 30ம் தேதி வரை, அவருக்கான விசாரணைக் காலத்தை நீட்டித்து, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், மீண்டும், அவரை சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

HOT NEWS