ஜெயிலுக்குச் சென்றார் ப சிதம்பரம்! திகார் சிறையில் அறை ஒதுக்கீடு!

06 September 2019 அரசியல்
pchidambarm.jpg

இந்தியாவின் முன்னாள் பொருளாதார அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான, ப சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா, முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார்.

இந்நிலையில், இன்று காலையில், ஜாமீன் வழங்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கினை விசாரித்த நீதிமன்றம், அவரை மேலும் விசாரிக்க சிபிஐ மற்றும் வருவாய்துறையின் அனுமதியை ஆதரித்து வரும் செப்டம்பர் 19ம் தேதி வரை, விசாரிக்க அனுமதி வழங்கியது.

இதனை முன்னிட்டு, ப சிதம்பரம் குற்றவாளிகளை அழைத்துச் செல்லப் பயன்படுத்தப்படும், வாகனத்தில், திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு 7ம் எண் சிறையின் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு அவர் மருந்துகள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, அங்கு இசட் பிரிவு பாதுகாப்பும் வழங்கப்பட உள்ளது.

ப சிதம்பரம் கைதை எதிர்த்து, தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி, மற்றும் காங்கிரஸ் கட்சியினர், போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், சிறைக்குச் செல்லும் வழியில் பேசிய ப சிதம்பரம், நாட்டின் பொருளாதாரமே எனக்குக் கவலை அளிப்பதாக கூறினார்.

HOT NEWS