தந்தையின் உடல்நலத்தினைக் கருத்தில் கொண்டு, பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டு உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சம்பந்தப்பட்டவர் என சிறையில் இருக்கும் பேரறிவாளன் தற்பொழுது ஜாமீனில் வெளி வந்துள்ளார். அவருடைய ஜாமீன் இன்றுடன் முடிவடைகின்ற நிலையில், மேலும் ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும் என, அவருடையத் தரப்பில் இருந்து தமிழக அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனையடுத்து, அவருடைய கோரிக்கையை ஏற்ற அரசு, நிபந்தனைப் பரோல் கொடுத்துள்ளது. அதன்படி, அவர் எவ்விதக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளக் கூடாது. ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் அவருக்கு தற்பொழுது விதிக்கப்பட்டு உள்ளன.