உத்திரப் பிரதேசத்தில், இரு நண்பர்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், 41 முட்டையை திண்றவர், 42வது முட்டையை உண்ணும் பொழுது சுயநினைவினை இழந்து விழுந்து உயிரிழந்தார்.
உத்திரப் பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில், வசித்து வருபவர் சுபாஷ் யாதவ். 42 வயதான இவர் தன்னுடைய நண்பருடன், பிபிகாஜ் மார்கெட் பகுதியில் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது, உரையாடல் சற்று தடிக்க ஆரம்பித்தது. இதனையடுத்து, 50 முட்டையை நீ தின்றால், உனக்கு 2,000 ரூபாயை தருகிறேன் எனப் பெட் கட்டியுள்ளார்.
தன் நண்பனை வென்று, அந்த 2,000 ரூபாயை பெற வேண்டும் என்ற எண்ணத்தில், சுபாஷ் களத்தில் இறங்கியுள்ளார். தொடர்ந்து, 41 முட்டைகளைத் திண்று முடித்தவர், 42 முட்டையைத் திண்ணும் பொழுது மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அவரை, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அப்பகுதியில் இருந்தவர்கள்.
அவரை சஞ்சயை காந்தி மருத்துவ மனையில் அனுமதித்தனர். இருப்பினும், அவர் அதிகமாக உட்கொண்டதன் காரணமாக, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனை ஏற்க மறுத்த உறவினர்கள், இது திட்டமிட்ட கொலை என்று கூறி வருகின்றனர்.