அக்டோபர் இறுதிக்குள் கொரோனா வைரஸிற்கு மருந்து! பிரபல நிறுவனம் அறிவிப்பு!

29 May 2020 அரசியல்
coronaisrael.jpg

உலகளவில் பரவியுள்ள கொரோனா வைரஸிற்கு, வருகின்ற அக்டோபர் மாதத்திற்குள் மருந்து தயாராகிவிடும் என, பிரபல மருந்து தயாரிக்கும் நிறுவனமான பிஃபிஸெர் தெரிவித்துள்ளது.

உலகளவில் தற்பொழுது பரவியுள்ள கொரோனா வைரஸிற்கு, மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டு உள்ளன. இதில், அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, இஸ்ரேல், சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் முன்னணியில் உள்ளன. இங்கிலாந்தில் மனிதர்கள் மீது, மருந்து பரிசோதனை நடைபெற்று உள்ளது.

அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இறுதிக் கட்டத்தில் மருந்து மீதான சோதனை நடைபெற்று வருகின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அமெரிக்காவின் பிரபல மருந்து தயாரிக்கும் நிறுவனமான பிஃபிஸெர் நிறுவனம் ஜெர்மனியில் உள்ள பயோன்டெக் நிறுவனத்துடன் இணைந்து, மருந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.

அந்த நிறுவனத்தின் முதன்மை அதிகாரி இது குறித்துக் கூறுகையில், தற்பொழுது மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியானது முக்கியக் கட்டத்தில் உள்ளது. அநேகமாக, வருகின்ற அக்டோபர் மாதத்திற்குள் இந்த கொரோனா வைரஸிற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிடும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

HOT NEWS