பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கரம்! பொதுமக்களை பிணயக் கைதியாகப் பிடித்த நபர்!

02 March 2020 அரசியல்
philippineshostages.jpg

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தனியார் மாலில், பொதுமக்களைப் பிணயக் கைதிகளாக பிடித்தவர் கைது செய்யப்பட்டார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின், மனிலா மாகாணத்தில் அமைந்துள்ள நகரான சான் ஜூவானில் அமைந்துள்ளது தனியார் மால். கிரீன்ஸ்ஹில்ஸ் எனப்படும் இப்பகுதியில், இரண்டாவது தளத்திற்கு சென்ற மர்ம நபர், அங்கிருந்து முப்பது பொதுமக்களை துப்பாக்கியினைக் காட்டி மிரட்டியுள்ளார்.

பின்னர், அங்கு அவர்களை பிணயக் கைதிகளாக பிடித்து வைத்தார். இவர் கையில் இருந்த ஆயுதங்கள் பற்றி, யாருக்கும் எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை. அங்கிருந்த மற்றவர்கள், அங்கிருந்து தலைத் தெறிக்க ஓடினர். பின்னர், அப்பகுதிக்கு சிறைபிடிக்கப்பட்டுள்ள மக்களை மீட்க, அதிரடிப் படையினர் குவிந்தனர்.

தொடர்ந்து, அவர்கள் நடத்திய பேச்சு வார்த்தையின் காரணமாக, அந்த நபரைக் கைது செய்து சென்றனர். அவர் பற்றி போலீசார் கூறுகையில், அவர் முன்னாள் காவலாளியாக அந்த மாலில் வேலை செய்த ஆர்ச்சி பரே என்ற நபர் எனக் கூறியுள்ளார். எதற்காக, அவ்வாறு செய்தார் என விசாரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

HOT NEWS