பொருளாதார மந்த நிலைக்கு காங்கிரஸே காரணம்! பியூஸ் கோயல்!

18 October 2019 அரசியல்
piyushgoyal1.jpg

இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்த நிலைக்கு, முன்னாள் ஆட்சி செய்த மன்மோகன் சிங் தலைமையிலான, காங்கிரஸ் கட்சியேக் காரணம் என அமைச்சர் பியூஸ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து, நேற்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பொழுது, காங்கிரஸ் கட்சியில் தான் பொருளாதார மந்த நிலை அதிகமாக இருந்தது எனவும், அதனை மன்மோகன் சிங் சரியாக கவனிக்கத் தவறியதால் தான், இப்பொழுதுப் பிரச்சனை மீண்டும் உருவாகி உள்ளது எனவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், மன்மோகன் சிங் ஆட்சியில், அனைத்து விதத்திலும் பொருளாதாரத்தில் தோல்வி அடைந்துவிட்டனர் என பியூஸ் கோயல் பேட்டியளித்துள்ளார்.

மன்மோகன் சிங் நிர்மலா சீதாராமனுக்குப் பதிலளித்தப் பிறகு, மன்மோகனுக்கு பதிலளிப்பதற்காக பியூஸ் கோயல் பேட்டியளித்தார்.

HOT NEWS