23 வயதில் 9 பேரை திருமணம் செய்த இளைஞர்!

24 November 2019 அரசியல்
playboy.jpg

திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என, தற்பொழுது 35 வயதான ஆண்கள் கூட பொறாமைப்படும் அளவிற்கு, மாபெரும் சாதனையை தஞ்சை மாவட்டத்தினை சேர்ந்த இளைஞர் செய்துள்ளார்.

தஞ்சை ஒரத்தநாடுப் பகுதியினை சேர்ந்தவர், சந்தோஷ் என்ற இளைஞர் வயது 23. இவரை, தற்பொழுது போலீசார் விசாரித்து வருகின்றனர். காரணம் தெரியுமா?

கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு, கருவிழிக்காடு என்ற கிராமத்தினைச் சேர்ந்த 20 வயதுடைய சத்யா என்றப் பெண்னை காதல் திருமணம் செய்து கொண்டார் சந்தோஷ். வாழ்க்கையும் சந்தோஷமாகத் தான் சென்றது. இதனிடையே, திடீரெனத் தலைவர் காணாமால் போனார். எங்கே எனத் தெரியாமல், கணவரைக் கண்டுபிடித்துத் தரும்படி, மனைவி சத்யா காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனால், அவரைத் தேடும் பணித் தொடங்கியது.

இந்நிலையில், திருப்பூரில் உள்ள சசிகலா என்ற 19 வயதுடையப் பெண்ணை வழக்கம் போல், தலைவர் காதலித்துத் திருமணம் செய்துள்ளார். இதனை கேள்விப்பட்ட மனைவி சத்யா காவல்நிலையத்தில் கூறியுள்ளார். அவரை, காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரித்ததில் சந்தோஷ் ஒரு காதல்மன்னன் எனத் தெரிய வந்துள்ளது.

ஆம், அவர் இதே போன்று பெண்களைக் காதலிப்பது, திருமணம் செய்வது பின் கழட்டிவிட்டு விட்டு, வேறொரு பெண்ணைத் திருமணம் செய்வது என இளவரசரைப் போல, ஜாலியாக வலம் வந்துள்ளார். இதனைக் கேட்ட போலீசாரே சற்று விரக்தி அடைந்துள்ளனர். இது குறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HOT NEWS