இன்று உலகம் முழுக்க உள்ள அனைவரும் பார்த்து ரசித்த விஷயம் என்றால், அது சூரிய கிரகணமே. இந்தியாவின் பல பகுதிகளிலும் மிகத் தெளிவாக, இந்த சூரிய கிரகணம் தெரிந்தது.
இதனைத் தன்னால் காண இயலவில்லை என, பாரதப் பிரதமர் மோடி கவலைத் தெரிவித்து உள்ளார். இது குறித்து, அவர் தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்து இருந்தார். அதில், மேக மூட்டமாக இருந்ததால், என்னால் வளைய சூரிய கிரகணத்தைக் காண இயலவில்லை எனக் கூறியுள்ளார்.
மற்ற இந்தியர்களைப் போல, தானும் இந்த சூரியக் கிரகணத்தினைக் காண விரும்பியதாகவும், இருப்பினும் தன்னால் காண முடியவில்லை எனவும் மிக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். கோழிக்கோடு மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் தெரிந்த சூரிய கிரகணத்தினை நேரடி ஒளிபரப்பின் மூலம் பார்த்ததாக கூறியுள்ளார்.