கொரோனா நெருக்கடிகளை வெற்றிகளாக மாற்றுவோம்! பிரதமர் மோடி பேச்சு!

11 June 2020 அரசியல்
modiicc.jpg

இன்று டெல்லியில் நடைபெற்ற இந்திய வர்த்தக கழகத்தின் 95வது விழாவில், ஆன்லைன் வழியாகக் கலந்து கொண்ட மோடி, அமைப்பின் முன்னிலையில் உரையாற்றினார்.

அவர் பேசுகையில், நெருக்கடியான சூழ்நிலைகளை, நாம் நம்முடைய வெற்றிக்கான பாதைகளாக மாற்ற வேண்டும் எனவும், அதற்கு சுயசார்புடைய இந்தியாவே தீர்வு எனவும் கூறியுள்ளார். பிற நாடுகளைப் போல, இந்தியாவும் கொரோனாவிற்கு எதிராக போரிட்டது. அந்த சமயத்தில், வெட்டுக்கிளிகள் படை மற்றும் புயல் ஆகியவைகளையும் தைரியமாக எதிர் கொண்டது. நம்முடைய தீர்க்கமான முடிவுகளே, நம்முடைய வருங்காலத்தை வளமாக்கும் என்றுக் கூறியுள்ளார்.

உள்நாட்டுப் பொருட்களை பயன்படுத்துவதுடன், வெளிநாட்டிற்கு நம்முடையப் பொருட்களை கொண்டு செல்ல வேண்டும். அதற்கான சந்தையினையும் உருவாக்க வேண்டும் எனவும் கூறினார். இந்தத் தருணம் துணிச்சலுடன் முடிவெடுப்பதற்கும், துணவுடன் நடப்பதற்கும் சரியான தருணம் எனவும் அவர் பேசியுள்ளார்.

HOT NEWS