வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம்! நூழிலையில் தப்பித்த டிரம்ப்!

20 September 2020 அரசியல்
white-house11.jpg

அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு விஷம் தடவியக் கடிதம் வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அமெரிக்கா தற்பொழுது கலைகட்டி உள்ளது. யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க உள்ளது. இதில், அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் தற்பொழுது முழு வீச்சில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளார். அவருக்கு தற்பொழது கனடா நாட்டில் இருந்து, கடிதம் ஒன்று வந்துள்ளது.

அந்தக் கடிதத்தினை ஆய்வு செய்த அதிகாரிகள், அந்தக் கடிதத்தில் ரைசின் என்ற விஷப்பொருள் தடவப்பட்டு இருப்பதனை உறுதி செய்து உள்ளனர். இந்தக் கடிதத்தில் விஷம் தடவப்பட்டு இருக்கலாம் என்பதை அறிந்ததை அடுத்து, அந்தக் கடிதம் எழுதிய நபர் யார் என, தேட ஆரம்பித்து உள்ளனர். இவ்வாறு விஷம் தடவப்பட்ட கடிதங்கள் அமெரிக்க அதிபருக்கு அனுப்பப்படுவது முதல் முறையல்ல. இவ்வாறு விஷம் தடவியக் கடிதத்தினை அனுப்பும் நபர்களுக்கு சராசரியாக 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகின்றது.

HOT NEWS