போலீசிற்கு போக்கு காட்டிய போதை ஆசாமி! ஈரோட்டில் காவலர்களிடம் சிக்கினான்!

28 December 2019 அரசியல்
erodedrunkenperson.jpg

தினமும் ஒரு பீஸ் இந்த மாதிரி சிக்கிருது, என்ன செய்ய என போலீசார் குமுறும் அளவிற்கு ஒருவர் காவலர்களை வைத்து கிழி கிழி என, கிழித்து எடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள, கீரைக்காரத் தெருவினைச் சேர்ந்தவர் பிரகாஷ். அவர் சாலையில் செல்லும் பொழுது, அங்கிருந்த போக்குவரத்து பெண் காவலரை கிண்டல் செய்துள்ளார். இதனையடுத்து, சக காவலர் அவரிடம் விசாரணைக்கு வா எனக் கூறியுள்ளார். அவ்வளவு தான், பனிமலை இருந்த பிரகாஷ் எரிமலையாக வெடிக்கத் தொடங்கி விட்டார்.

வாயில் வந்த அனைத்து கெட்ட வார்த்தைகளையும், ஒன்று விடாமல் கொட்டிவிட்டார். அந்தப் பெண் காவலரும், சக போக்குவரத்துக் காவலரையும் கழுவி ஊற்றினார். அவரைத் தடுக்க முயற்சித்தவர்கள், அவரை அடித்தும் பார்த்தனர். ஆனால், அவர் அப்பொழுதும் கேட்கவில்லை. பின்னர், வேறு வழியின்றி, சட்டம் மற்றும் ஒழுங்குப் போலீசாருக்கு இதுபற்றி போக்குவரத்துக் காவல்துறையினர் புகார் அளித்தனர். இருப்பினும் அடங்காத பிரகாஷ், சட்டையினைக் கழட்டிக் கொண்டு வாடா, ஒத்தைக்கு ஒத்த வாடா, மோதிப் பார்ப்போம் என வரிந்து கட்டிக் கொண்டு நின்றார்.

அவர்கள் வந்த தான் தாமதம். போதையில் இருந்த பிரகாஷ் பவானி ஆற்றுக்குள் இறங்கிவிட்டார். அங்கிருந்தாலும், போலீசாரை அவர் விடவில்லை. தொடர்ந்து, திட்டிக் கொண்ட இருந்தவருக்கு போதை தெளிந்தது. மனிதர் கதறிவிட்டார். தான் போதையில் அவ்வாறு செய்துவிட்டதாகவும், அதனால் தன்னை மன்னிக்கும் படியும் அவர் கேட்டுக் கொண்டார். இருப்பினும், காவலர்கள் தகுந்த ”மரியாதை” செய்து அவரை அழைத்துச் சென்றனர்.

HOT NEWS