உள்ளாட்சித் தேர்தல் காரணமாக, டிசம்பர் 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களில், பொங்கல் பரிசு வழங்கப்பட மாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தேர்தல் நடைபெற உள்ளதால், பொங்கல் பரிசிற்குத் தடை விதிக்கக்கோரி, திண்டுக்கல்லைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டனர்.
டிசம்பர் 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள, 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை. டிசம்பர் 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள ஒன்பது மாவட்டங்களிலும், ஊராட்சி, நகராட்சிகளிலுமே பொங்கல் பரிசு வழங்க அனுமதி வழங்கியுள்ளது என விளக்கம் அளித்தது.
தமிழக அரசின் விளக்கத்தினை அடுத்து, இந்த வழக்கினை முடித்து வைப்பதாக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.