மோடி அரசு தொடர்ந்து பொய்யினை மட்டுமே பேசி வருவதாக, தேர்தல் வியூக நிபுணரான பிரஷாந்த் கிஷோர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பல மாநிலங்களினை ஆளும் தலைவர்களை, வெற்றியாளர்களாக மாற்றியவர் பிரஷாந்த் கிஷோர். இவர் ஒரு காலத்தில், மோடியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். ஆனால், தற்பொழுதுள்ள நிலை வேறு. தற்பொழுது பிரஷாந்த் கிஷோர் மோடிக்கு எதிரான மனநிலையில் இருப்பதாக தெரிகின்றது. தொடர்ந்து, பல எதிர்ப்பான பதிவுகளை அவர் வெளியிட்டு வருகின்றார்.
பீகார் மாநிலத்தின், நிதிஷ் குமார் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகிய பிரசாந்த் கிஷோர் தற்பொழுது திமுகவின் தேர்தல் ஆலோசகராக உள்ளார். அவர் தற்பொழுது டிவிட்டரில் அதிரடி பதிவு ஒன்றினைப் பதிவு செய்துள்ளார். அதில், 21 நாட்களில் கொரோனா வைரஸை வென்றாகி விட்டது. அதே போல், சீன வீர்களும் சண்டையிட வரவில்லை. அடுத்தது பொருளாதாரம் மட்டுமே. அதனையும் விரைவில் மாற்றிவிடுவோம்.
இவ்வளவு தான். தொடர்ந்து, பொய்யான தேர்தல் பிரச்சாரங்களுடன் தொடர்பிலிருங்கள் என, பிரஷாந்த் கிஷோர் பதிவு செய்துள்ளார். இது தற்பொழுது பேசு பொருளாகி உள்ளது.
Asking questions or seeking accountability from Govt is NOT ANTI NATIONAL.Especially when 20 bravehearts sacrificed their lives defending the motherland.
— Prashant Kishor (@PrashantKishor) June 23, 2020
It wasn’t then when Mr. Modi or BJP did it, nor is it today when the opposition, or any Indian citizen does it #stopbullying