குழந்தைப் பெற்ற ஆண்! அதிர்ச்சியடைந்த டாக்டர்கள்! என்ன நடந்தது தெரியுமா?

29 January 2020 அரசியல்
manchild.jpg

இலங்கையில் ஆண் ஒருவர் குழந்தைப் பெற்ற விஷயம், உலக மருத்துவ வரலாற்றையே அதிர வைத்துள்ளது.

இலங்கையில் உள்ள மாத்தறை பகுதியில், ஆண் ஒருவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்பொழுது, அவரைப் பார்த்த மருத்துவர்கள் ஆண்கள் பிரிவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், பிறகு தான் தெரிந்தது அவர் பிரசவ வலியால் துடிக்கின்றார் என்று.

இதனையடுத்து, அவரை பிரசவ பிரிவிற்கு அனுப்பி வைத்தனர். அங்கு, ஒரு ஆண் பிரசவத்திற்கு வந்திருப்பதைக் கண்டு, பெண் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அவருக்கு வெற்றிகரமாக பிரசவம் பார்க்கப்பட்டு ஆண் குழந்தைப் பிறந்தது. இதனால், அந்த மருத்துவமனையில் வியப்படைந்தனர்.

இது குறித்து விளக்கமளித்துள்ள மருத்துவ நிர்வாகம், அவர் தாடி, மீசையுடன் இருந்தாலும் அவர் ஆண் அல்ல. அதிகப்படியான ஹார்மோன் கோளாறு காரணமாக, அவர் ஆணாக மாறியுள்ளாரே தவிர, அவர் ஒரு பெண். அவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர். தனிநபர் பாதுகாப்புக் கருதி, அவர் பெயரை வெளியிடவில்லை.

அவர் உடலமைப்பு, பெண்ணிற்குரிய உடலமைப்புடன் உள்ளது. இருப்பினும், அவரால் தாய்பால் தர இயலாது என, மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து, தன்னால் அந்தக் குழந்தையை வளர்க்க முடியாது எனவும், அதனை நீங்களேப் பார்த்துக் கொள்ளுங்கள் எனவும் கூறியிருக்கின்றார். இதனால், அந்தக் குழந்தையை மருத்துவ நிர்வாகமே ஏற்றுக் கொண்டது. இச்சம்பவம், தற்பொழுது உலகளவில் வைராலகி வருகின்றது.

HOT NEWS