மாநிலங்களவையில் 125 எம்பிக்களின் ஆதரவுடன் தேசிய குடியுரிமை மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு 105 எம்பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், பாஜக தான் கொண்டு வந்த மசோதாவினை வெற்றிகரமாக நிறைவேற்றியது.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவானது, தற்பொழுது குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு, அதனைப் படித்துப் பார்த்த இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தற்பொழுது குடியுரிமை மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.