இங்கிலாந்து அரியாசனத்தில் அமர்வதற்கு தகுதியான இளவரசர் சார்லஸிற்கு, கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது.
உலகம் முழுக்கப் பரவி வரும் கொரோனா வைரஸிற்கு, நாட்டின் தலைவர்களும் தப்பிக்கவில்லை. இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர், ஸ்வீடன் நாட்டு அதிபரின் மனைவி, கனடா நாட்டு அதிபரின் மனைவி எனப் பலருக்கும், இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், 72 வயதுடைய இங்கிலாந்து இளவரசர் சார்லஸிற்கும் இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால், அவர் தனிமைப்படுத்தப்பட்டு ஸ்காட்லாந்து அரண்மையில் தங்க வைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு, உயர் ரக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், விரைவில் குணமடைவார் எனவும் கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து, 93 வயதுடைய இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், தன்னுடைய அனைத்துக் கூட்டங்களையும் ரத்து செய்துள்ளார்.