நான் இந்திரா காந்தியின் பேத்தி! உங்களால் முடிந்ததை செய்யுங்கள்! ப்ரியங்கா காட்டம்!

26 June 2020 அரசியல்
priyankagandhi1.jpg

நான் இந்திரா காந்தியின் பேத்தி எனவும், உங்களால் என்ன முடியுமோ அதை செய்யுங்கள் என, உத்திரப் பிரதேச அரசினை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

உத்திரப் பிரதேசத்தில் உள்ள கான்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள குழந்தைகள் மற்றும் சிறுமிகள் காப்பகத்தில், 57 சிறுமிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, பெரும் சர்ச்சை வெடித்தது. அது மட்டுமின்றி, அங்குள்ள சிறுமிகளில் மூன்று பேர் கர்ப்பமாக இருப்பதாகவும், அவர்களில் ஒரு சிலருக்கு ஹெச்ஐவி தொற்று இருப்பதாகவும் உத்திரப் பிரதேச மாநில குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு குற்றம் சாட்டியது.

இது கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தின் மூலம், கடுமையான தாக்கிப் பேசியிருந்தார் ப்ரியங்கா காந்தி. அதற்கு, தவறான பதிவுகளால் மக்களை தவறானப் பாதைக்கு அழைப்பதாக குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு கூறியது. மேலும், அடுத்த மூன்று நாட்களுக்குள் சரியான பதிலை அளிக்க வேண்டும் என்றும் கூறியது.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள ப்ரியங்கா காந்தி, நான் யோகி ஆதித்யநாத்தினை பார்த்துப் பயப்பட மாட்டேன். நான் இந்திரா காந்தியின் பேத்தி. உங்களால் என்ன முடியுமோ அதை செய்யுங்கள். குழந்தைகளின் பாதுகாப்பு எனக்கு மிகவும் முக்கியம். சக மனிதராகவும், மக்கள் பணியில் இருப்பவராகவும் மக்களுக்கு இளைக்கப்படும் அநீதிகளைத் தட்டிக் கேட்பது என் கடமை என்றுக் கூறியுள்ளார்.

HOT NEWS