நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில், திருட்டில் ஈடுபட்ட சினிமாத் தயாரிப்பாளர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை விசாரிக்கையில், பாதியில் நின்ற திரைப்படத்தை மீண்டும் எடுத்து முடிப்பதற்காக, திருட வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
நாமகிரிப்பேட்டையில், போலீசார் வழக்கம் போல், ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது, அங்கே வெள்ளை நிறக் கார் ஒன்று தயாராக இருந்துள்ளது. அதனருகே 5 பேர் பேசிக் கொண்டு இருந்தனர். இதனைக் கண்காணித்த காவலர்கள், அவர்கள் அருகே சென்றதும் தெறித்து ஓடியுள்ளனர்.
ஓடியவர்களை மடக்கிப் பிடித்தப் போலீசார் விசாரித்தனர். அப்பொழுது, அவர்கள் அளித்த வாக்குமூலம், காவலர்களையே வாயைப் பிளக்க வைத்துள்ளது.
நாமகிரிப் பேட்டையில் உள்ள, பெரிய வீடுகளை குறிவைத்து கொள்ளையடிக்க வந்ததாகவும், தாங்கள் எடுத்தத் திரைப்படம் பாதியில் நின்றவிட்டதால், தயாரிப்பு செலவுகளுக்காக திருட வந்ததாகவும் கூறியுள்ளனர்.
இதனையொட்டி, கார் டிரைவர் ரவி, டைரக்டர் பாண்டியன், விஜயகுமார், தவனேஷ்வரன், வழக்கறிஞர் பிரதீப் சரண் ஆகியோரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின், சேலத்தில் உள்ள சிறையில் அடைத்தனர். இந்த சம்பம், நாமக்கல்லில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.