ஜூலை மாதத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும்! அமைச்சர் அறிவிப்பு!

06 June 2020 அரசியல்
sengottaiyancorona.jpg

பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள், ஜூலை மூன்றாவது வாரத்தில் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் வருகின்ற ஜூன் 15ம் தேதி முதல் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்த சூழ்நிலையில், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வினை நடத்தக் கூடாது என, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு உள்ளது. இந்த தேர்வானது கட்டாயம் நடக்கும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்குச் செய்து தர வேண்டிய வசதிகள் அனைத்தும் தற்பொழுது செய்து தரப்பட்டு வருகின்றன.

பொதுத் தேர்வுகள் அனைத்தும், தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக அந்தந்தப் பள்ளிகளிலேயே நடைபெற உள்ளன. இந்நிலையில், பரிட்சையை நடத்தும் பொருட்டு அனைத்து பள்ளிகளும் தற்பொழுது, கிருமி நாசினித் தெளிக்கப்பட்டு முழுவதும் தயாராகி வருகின்றன. ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 நபர்கள் மட்டுமே பரிட்சை எழுத அனுமதிக்கப்பட உள்ளனர். போக்குவரத்து வசதிகளும் செய்து தரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பரிட்சைகளின் முடிவுகள் குறித்து பேசும் பொழுது, வருகின்ற ஜூலை மூன்றாவது வாரம் பொதுத்தேர்வுகளின் முடிவுகள் அனைத்தும் வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

HOT NEWS