புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக் கொலை! போலீசார் வலைவீச்சு!

31 January 2020 அரசியல்
murder11.jpg

புதுச்சேரியில், கிருமாம்பாக்கம் முன்னாள் கவுன்சிலர் வீரப்பனின் மைத்துனர் சாம்பசிவத்தினை, ஆறு பேர் கொண்ட கும்பல் கொலை செய்துள்ளது.

மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல், புதுச்சேரியில் காரில் சென்று கொண்டிருந்த சாம்பசிவத்தின் மீது வெடி குண்டு வீசி, தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காரில் வெடிகுண்டு போடப்பட்டதும், காரினை விட்டு இறங்கி ஓடிய சாம்பசிவத்தினை, மர்ம நபர்கள் கொண்ட கும்பல், கையில் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களை வைத்துத் தாக்கியுள்ளனர். தலை, கழுத்து, மார்பு உள்ளிட்ட இடங்களில், பலத்த காயம் அடைந்த சாம்ப சிவம் உயிரிழந்தார்.

இவர், பணம் கொடுக்கல் வாங்கல், கட்டப்பஞ்சாயத்து, நிலம் விற்பனை, ஆகியவைகளில் ஈடுபடுபவர் ஆவார். இவரது மாமாவும் முன்னாள் கவுன்சிலருமான வீரப்பனும், ஏற்கனவே நான்கு ஆண்டுகளுக்கு முன்னாள் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொலையைத் தொடர்ந்து, போலீசார் தற்பொழுது மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

HOT NEWS