கொடுக்காப்புளி சாப்பிட்டால் கொரோனா வராது! எம்எல்ஏ அதிரடி! யாரூ சாமி நீங்க?

11 March 2020 அரசியல்
pudhucherrymla.jpg

கொடுக்காப்புளி சாப்பிட்டால், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாது, என, புதுச்சேரி எம்எல்ஏ ஜான்குமார் பேசியுள்ளார் இது தற்பொழுது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

புதுச்சேரியில் உள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில், மகளிர்தின விழா நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட பேசிய புதுச்சேரி எம்எல்ஏக்களுள் ஒருவரான ஜான்குமார், உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது பரவி வருகின்றது. இதனைத் தடுக்க பல எளிய வழிமுறைகள் உள்ளன. கொடுக்காப்புளி சாப்பிட்டால், கொரோனா வராது.

கொடுக்காப்புளி, நெல்லிக்காய், சின்ன வெங்காயம், பூண்டு முதலியவைகளை உண்ணும் பொழுது, கொரோனா வைரஸ் வராது. அத்துடன், பழைய சோறு சாப்பிட்டால், கொரோனா மட்டுமில்லை, மரணம் கூட வராது. காலையிலும், மாலையிலும் வெயிலில் நிற்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

HOT NEWS