உலகம் முழுக்கப் பரவி வருகின்ற கொரோனா வைரஸினை, அமெரிக்கா தான் பரப்பி உள்ளது என, ஈரான் அதிபர் குவாசிம் சுலைமானி அதிரடியாகக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், நீண்ட காலமாக, ஈரானுக்கு எதிரியாக உள்ள அமெரிக்கா தங்களுக்கு உதவ முன்வந்தது. அதனை நான் நிராகரித்துவிட்டேன். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல முறை அமெரிக்கா முன்வந்தது. நான் அவர்களின் உதவியினை மறுத்துவிட்டேன்.
அவர்கள் தான் அந்த வைரஸினை உருவாக்கினார்கள் என்ற தகவலும் உலவி வருகின்றது. அதுதான் உண்மையா என எனக்குத் தெரியாது.ஆனால், எங்களுக்கு அமெரிக்கா உதவ வருவது வியப்பாகவே தற்பொழுது வரை உள்ளது. உதவி என்றப் பெயரில், கொரோனா வைரஸை ஈரான் நாட்டில், முழுக்கப் பரப்பி விட்டால், நிரந்தரமாக தங்க வைத்துவிட்டால் என்ன செய்வது? அமெரிக்கத் தலைவர்கள் அனைவருமே, தங்களுக்கு அனைத்தும் தெரிந்தது போல நடிக்கக் கூடியவர்கள் தான் எனவும் அவர் தெரிவித்தார்.