திமுகவில் இருந்து அதிமுக சென்ற ராதா ரவி, ஜெயலலிதா பின்னர் திமுகவில் இணைந்தார். பின்னர், நயன்தாராவினைக் கொச்சையாகப் பேசியதால், திமுவில் இருந்து விலகிய ராதா ரவி, அதிமுகவில் இணைந்தார்.
இதனிடையே, தற்பொழுது பாஜக நடத்தும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு, மோடியினைப் புகழ்ந்தும், அதிமுகவினைத் தாக்கிப் பேசாமலும், அதே சமயம் சிஏஏ என்ஆர்சி என்பிஆர் உள்ளிட்டவைகளை ஆதரித்தும், பிரச்சாரம் செய்து வருகின்றார். ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் அவர் பேசும் பொழுது, நான் போகாத கட்சியே இல்ல, தம்பி ராமையா கட்சி ஆரம்பிச்சா அங்கயும் போயிற வேண்டியது தான் என அவரை, அவரே நக்கலாக பேசியிருந்தார்.
இந்நிலையில், தற்பொழுது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தினை சந்தித்துள்ளார். எப்பொழுதும், ரஜினிகாந்தினை தாக்கிப் பேசி வந்தவர் ராதா ரவி. ரஜினிகாந்த் தமிழகத்தில் அரசியலுக்கு வரக் கூடாது என்றும் கூறி வந்தவர், தற்பொழுது ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவிருப்பதை அடுத்து, அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றார்.
தன்னுடைய குடும்பத்தாருடன் ரஜினிகாந்தின் வீட்டிற்குச் சென்ற அவர், அங்கு ரஜினிகாந்துடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். விரைவில், ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க உள்ள நிலையில், அந்தக் கட்சியில் அவர் சேருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.